follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுஇம்முறை 1585 பேருக்கு ஹஜ் கடமைகளை நிறைவேற்ற வாய்ப்பு

இம்முறை 1585 பேருக்கு ஹஜ் கடமைகளை நிறைவேற்ற வாய்ப்பு

Published on

இம்முறை புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 1585 பேருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1585 பேரை விட அதிகமானவர்களுக்கு வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் எதிர்காலத்தில் இடம்பெறும் எனவும் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்தார்.

2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஹஜ் கடமைக்கு செல்வதற்கு 4000-க்கும் அதிகமானவர்கள் பதிவு செய்திருந்ததாகவும் அவர்களின் அநேகமானவர்கள் பணம் செலுத்தியுள்ளதாகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.

மேலும் இம்முறை ஹஜ் கடமைக்கு செல்வோர் 65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

எனவே, அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு முன்னுரிமை வழங்க வேண்டியவர்கள் தொடர்பிலான வழிகாட்டியொன்றை தயாரித்து வருவதாக அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...