follow the truth

follow the truth

July, 13, 2025
Homeஉள்நாடுஅடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லாபிரேரணை கொண்டு வரப்படும்

அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லாபிரேரணை கொண்டு வரப்படும்

Published on

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் தீர்மானமிக்க ஒன்றாக இருக்கும் எனவும் மக்கள்போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வன்னம் அந்த வாரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாபிரேரணை கொண்டு வரப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வுகள் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் பாராளுமன்ற அமர்வுகள் இல்லாதபோது செய்ய வேண்டியவை தொடர்பாக புரிதல் இல்லாதவர்கள் சொல்லும் கதைகள் குறித்து தான் ஒருபோதும் பொறுட்படுத்துவதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டில் துன்பப்படும் மக்களின்அபிலாஷைகளை எந்த வகையிலும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்தே உண்மையானதேசப்பற்றாளர்கள் மற்றும் மக்கள்வாதிகள் யார் என்பதை அடையாளம் காண முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்குள் நாட்டை வீழ்ச்சியின் விளிம்பிற்கே கொண்டு சென்றராஜபக்ச அரசை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திரத்திற்கானபோராட்டத்தின் ‘ஐக்கிய சக்தி பாத யாத்திரை’ இன்று (30) ஐந்தாவது நாளாக யக்கல நகரில்ஆரம்பமானது.

இன்றைய நாள் பேரணியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர்மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள்உள்ளிட்டு இலட்சக்கணக்கான மக்கள் இப்பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய நாளுக்கான அதன்நிறைவிடம் பேலியகொட நகரமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...