follow the truth

follow the truth

July, 13, 2025
Homeஉள்நாடுமகா சங்கத்தினர் அரசாங்கத்திற்கு வௌியிட்டுள்ள பிரகடனம்

மகா சங்கத்தினர் அரசாங்கத்திற்கு வௌியிட்டுள்ள பிரகடனம்

Published on

மகா சங்கத்தினரின் கோரிக்கைக்கு எதிராக அரச தலைவர்கள் செயற்பட்டால் அது சாபமாக மாறும்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நீக்கி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு மகா சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு புறம்பாக அரச தலைவர்கள் செயற்பட்டால் இதுவரை காலமும் வழங்கிய ஆசிர்வாதம் அனைத்தும் சாபமாக மாறும் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

ஆயிரம் பௌத்த தேரர்களின் பங்குப்பற்றலுடன் இன்று(30) சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்ற சங்கமகா பிரகடனத்திற்கான மகா சம்மேளனத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும். நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்கி மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்காக மகாநாயக்க தேரர்கள் முன்வைத்த யோசனைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோரி இன்று மகா சங்கத்தினர் பிரகடனம் ஒன்றை வௌியிட்டனர்.

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையில்லாததால், நாட்டை மீட்டெடுத்து மக்களின் எதிர்ப்பை தணியச் செய்து, வீழ்ச்சியடைந்த மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் என இன்றைய தினம் முன்வைக்கப்பட்ட மகா சங்கத்தினரின் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...