follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடு123 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது

123 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது

Published on

யாழ்ப்பாணம் – காரைநகர், சவுக்காடு கடற்கரையில் 123 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த டிங்கி படகொன்றை சோதனைக்குட்படுத்திய போது, கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனையில் 15 உரப்பைகளில் பொதியிடப்பட்ட நிலையில், சுமார் 492 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுடன், வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...