ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் ஒருங்கிணைப்பதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்
இதன்படி இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர பிரதானி கே.டி.எஸ் ருவன் சந்திரா அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இரண்டு மேலதிக ஆணையாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் ரோஹன புஸ்பகுமார மற்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் மேலதிக ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதன் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 25 மாவட்டங்களின் செயலாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.