மல்வானை பகுதியில் சொகுசு இல்லத்தை நிர்மாணித்தமையின் ஊடாக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை தொடர்ந்து முன்கொண்டு செல்வதா, இல்லையா என்பது தொடர்பான உத்தரவு அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கம்பஹா மேல்நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர முன்னிலையில் அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாவது பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நாட்டின் தற்போதைய நிலை காரணமாகவும் திருகுமார் நடேசன் சுகவீனம் காரணமாகவும் மன்றில் முன்னிலையாகவில்லை என அவர்களது சட்டத்தரணி மன்றுரைத்தார்.