follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஅலகா சிங் - சஜித் பிரேமதாச சந்திப்பு

அலகா சிங் – சஜித் பிரேமதாச சந்திப்பு

Published on

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி அலகா சிங் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (23) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு முன்னெப்போதையும் விட வலுவான ஆதரவை வழங்குமாறு இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப்பொருள்களின் தட்டுப்பாடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இந்நிலைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் செயற்படுத்தப்பட்டுவரும் “எதிர்க்கட்சியின் மூச்சு” வேலைத்திட்டம் மூலம் 50 க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரால் இதன் போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டதோடு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியால் பாராட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட...

2,210 கிலோ சட்டவிரோத லன்ச் ஷீட்கள் பறிமுதல்

மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து...