எரிவாயு சிலிண்டர்கள் விநியோக நடவடிக்கை அடுத்த வார நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
முற்பதிவு செய்யப்பட்டுள்ள எரிவாயு அடங்கிய கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவன தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
இதற்கமைய எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) வரை எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், திங்கட்கிழமை முதல் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.