மும்பையில் கடந்த 2021ஆம் ஆண்டு கப்பலில் நடந்த விருந்தில், போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி என்று தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு, ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பாக 6 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு தாக்கல் செய்தது.
இதில், ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால், இந்த வழக்கில் அவரை நிரபராதி என்று தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.