follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉள்நாடு21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை விரைவில் நிறைவேற்ற இணக்கம்

21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை விரைவில் நிறைவேற்ற இணக்கம்

Published on

21 ஆவது திருத்தம் தொடர்பில் இன்று இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கான பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கட்சித் தலைவர்கள் சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது.

குறித்த அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் குறித்த சந்திப்பு முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கலந்துகொள்ள முடியாத காரணத்தினால், கூட்டமைப்பின் பங்களிப்புடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இறுதி சந்திப்பை நடத்தி வரைபை பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...