நேபாளத்தில் விமான விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து தற்போது கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தின் சுற்றுலா நகரான பொக்காரவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு நேற்று முன்தினம் சென்ற விமானம், இமயமலை பகுதியில் விழுந்து நொறுங்கியது.
விபத்தில் விமானத்தில் இருந்த அனைவருமே உயிரிழந்துள்ளதுடன், விமானம் விழுந்த பகுதியை நேபாள மீட்பு படையினர் கண்டுபிடித்தனர்.