follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுவெள்ளை வேன்களுக்கு பதிலாக மோட்டார் சைக்கிள் பயன்படுத்தி கொலைகள் - சஜித்

வெள்ளை வேன்களுக்கு பதிலாக மோட்டார் சைக்கிள் பயன்படுத்தி கொலைகள் – சஜித்

Published on

கடந்த காலங்களில் வெள்ளை வேன்களை பயன்படுத்தி செய்யப்பட்ட கொலைகள் தற்பொழுது மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றனாவா என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

வீதியில் இருக்கும் மக்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடாத்தப்படுவதாகத் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பகலில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாகவும் இதுவா ராஜபக்ச ஜனாதிபதி உறுதியளித்த தேசியப் பாதுகாப்பு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு உயிரிழந்த சிலர் முக்கியமான வழக்குகளின் அரசாங்க சாட்சியாளர்கள் என கேள்விபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களின் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் சாட்சியாளர்களே இவ்வாறு படுகொலை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்வதாக உறுதியளித்து ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் இன்று தேசியப் பாதுகாப்பினை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிராட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார். நாடு தவிர்க்க முடியாத...

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை,...