follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுமுதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

Published on

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் அணி 4 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் தனது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தினேஸ் சந்திமால் அதிகபட்சமாக 76 ஓட்டங்களையும் மஹீஷ் தீக்‌ஷன 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் ஷஹீன் அப்ரிடி 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹசன் அலி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்களையும் ரமேஷ் மென்டிஸ் மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் அணித்தலைவர் பாபர் அஸாம் 119 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 4 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 337 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 94* ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 76 ஓட்டங்களையும் மற்றும் ஓசத பெர்ணான்டோ 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் மொஹமட் நவாஸ் 88 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதனடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு 342 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து 344 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் அப்துல்லா சாபீக் ஆட்டமிழக்காமல் 160 ஓட்டங்களையும் அணித்தலைவர் பாபர் அஸாம் 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி இந்தோனேசியாவுக்கு

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி...

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு கோரிக்கை நிராகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும், செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக கட்சி,...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என...