கர்ப்பிணி தாய்மார்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை

994

கர்ப்பிணி தாய்மார்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என குடும்பநல சுகாதார பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கர்ப்பிணி தாயொருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுமாயின், சாதாரண நபரொருவர் தொற்றுக்குள்ளாவது போல் இல்லாமல் அதிக சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுவது முக்கியம் எனவும் அவர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என குடும்பநல சுகாதார பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here