follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுகோதுமை மா தட்டுப்பாடு 15ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும்?

கோதுமை மா தட்டுப்பாடு 15ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும்?

Published on

தற்போது நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு, எதிர்வரும் 15ஆம் திகதியின் பின்னர், முடிவுக்கு வரும் என நம்பிக்கை கொள்வதாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

துருக்கியிலிருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 450 ரூபா வரையில் அதிகரித்தால், 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை, 350 ரூபா வரையில் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கு, அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், தாங்களும், நுகர்வோரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அநுராதபுர மாவட்ட சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க அனுரகுமார, பாண் இறாத்தல் ஒன்றின் விலை தற்போது 240 ரூபாவிலிருந்து, 270 ரூபாவாக அதிகரித்துள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

நாளைய தினம், கோதுமை மா கிலோ 420 ரூபா வரையில் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறெனின், பாண் இறாத்தல் ஒன்றின் விலை 320 ரூபாவாக அதிகரிக்கும்.

நாளை மறுதினம் கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 450 ரூபாவாக அதிகரித்தால், பாண் இறாத்தல் ஒன்றின் விலை 350 ரூபா வரையில் அதிகரிக்கும் நிலை உள்ளதாக அநுராதபுர மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க அனுரகுமார தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...