follow the truth

follow the truth

June, 26, 2025
Homeஉள்நாடுதேசிய சபைக்கு ஒப்புதல்

தேசிய சபைக்கு ஒப்புதல்

Published on

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 37 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சபைக்கு, கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை தணிக்கும் வகையில், ´தேசிய சபை´ அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (07) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.

அந்த உடன்படிக்கையின்படி, சபாநாயகர் தேசிய சபையின் தலைவராகவும், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபைத் தலைவர் மற்றும் ஆளும் கட்சியின் தலைமை அமைப்பாளர் ஆகியோர் அதிகாரபூர்வமாக அதன் உறுப்பினர்களாகவும் ஆவர்.

தேசிய சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 37 ஆகும், இதில் பாராளுமன்றத்தில் செயல்படும் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இது தொடர்பான பிரேரணையை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்...

ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்

மேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து, ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை...

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயம்

அநுராதபுரம் - திரப்பனை, கல்குலம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த துப்பாக்கிச்...