follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுமுதலாவது சிங்களப் பத்திரிகைக்கு 160ஆவது ஆண்டு

முதலாவது சிங்களப் பத்திரிகைக்கு 160ஆவது ஆண்டு

Published on

அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு இலங்கையில் வெளிவந்த முதலாவது சிங்களப் பத்திரிகையான “லக்மினி பஹன” எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதியுடன் 160 ஆண்டு நிறைவைக் காண்கிறது.

குணதிலக்க அத்தபத்து சல்பிடி கோறளயே முதலியார்  தலைமையில் இரத்மலானை பரம தம்ம சைத்தியராமாதிபதி அதிவணக்கத்துக்குரிய வளானே ஸ்ரீ சித்தார்த்த மா தேரரின் வழிகாட்டலில் இந்தப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தலைமை ஆசிரியராக புகழ்பெற்ற அறிஞர் பண்டிதர்  கொக்கல பணியாற்றினார்.

நான்கு பக்கங்களைக் கொண்ட இந்தப் பத்திரிகை அக்கால நிலவரப்படி ‘ஒரு காசு’க்கு விற்பனை செய்யப்பட்டது. கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட ஜெயசூரிய ஆராச்சிகே ஹென்ட்ரிக் பெரேரா இதன் வெளியீட்டாளராக செயற்பட்டுள்ளார். கொழும்பு வுல்பெண்டல் தெருவில் நடத்தப்பட்டு வந்த  அச்சகத்தில் இந்தப் பத்திரிகை அச்சிடப்பட்டது.

பின்னர்  குமாரதுங்க முனிதாச ஆசிரியரின் தலைமையில் பல வருடங்கள் இந்தப் பத்திரிகை வெளிவந்தது. மாத்தறை திக்வெல்ல,  வவுருகன்னல மகா விகாரையின் வணக்கத்திற்குரிய கலாநிதி திக்வெல்ல திஸ்ஸ மா தேரர் அவர்கள் உயிரிழக்கும் வரை  “லக்மினி பஹன” பத்திரிகை அச்சிடப்பட்டு வந்தது.

இலங்கை ஊடகத்துறையிலும் பத்திரிகை வரலாற்றிலும் அழியா நினைவுச் சின்னமாக விளங்கும் “லக்மினி பஹன” பத்திரிகையின் 160ஆவது ஆண்டு நிறைவு விழா, இலங்கை ஊடகத்துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...