follow the truth

follow the truth

July, 21, 2025
Homeஉள்நாடுவாரத்தில் 4 நாட்கள் தபால் சேவை மேற்கொள்ள முடிவு

வாரத்தில் 4 நாட்கள் தபால் சேவை மேற்கொள்ள முடிவு

Published on

தபால் சேவைகள் இ​டம்பெறும் நாட்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்

தாபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், வாரத்தில் ஆறு நாட்களுக்கு பணி நிமித்தம் அலுவலகங்களை திறக்க கடந்த தினம் தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும், கடுமையான போக்குவரத்து சிரமங்கள் இருப்பதால், அந்த நிலையை பராமரித்துச் செல்ல கடுமையான தடைகள் ஏற்பட்டுள்ளன.

அதன்படி, தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் உடன்பாட்டுடன், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரண்டு நாட்களுக்கு அலுவலகங்களை மூடவும், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தபால் சேவைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதியோர் கொடுப்பனவுகள் உள்ளிட்ட கொடுப்பனவுகள் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் வழங்கப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு – சிவப்பு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் நிலைமை குறித்த சிவப்பு எச்சரிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, சிலாபம் முதல் புத்தளம்...

ரூ.75 இலட்ச மோசடி குற்றச்சாட்டு – ரொஹான் வீடு நோக்கி விசாரணை அதிகாரிகள் செல்லவே இல்லையாம்

ரூபாய் 75 இலட்சம் நிதி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் (ஓய்வு) ரொஹான்...

மஹிந்தானந்த, நளின் மீது புதிய வழக்கு – பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்

2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார காலத்தில், அரசியல் லாபம் கோரி சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும்...