follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுஅரச சேவைக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்ய தீர்மானம்

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்ய தீர்மானம்

Published on

நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்கையில், அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்வதற்கு நேற்றைய அமைச்சரவையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரச உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளமையால், அனுமதி வழங்கப்பட்ட பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான தீர்மானத்தினால் அடிக்கடி அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையால், சில சேவைகளுக்கு அதிகமாக ஊழியர்கள் காணப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இதனை மீளாய்வு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிஜிட்டல் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

அரசதுறையில் சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு படியாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்...

இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கான அறிவித்தல்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் செயற்பாட்டு மட்டத்தில் இல்லை என்று...

மக்கள் வங்கியின் 2024 ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (18) ஜனாதிபதி...