follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1சவூதி அரசு அறிவித்துள்ள புதிய பயண விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள்

சவூதி அரசு அறிவித்துள்ள புதிய பயண விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள்

Published on

சவூதி அரேபியாக்குச் செல்ல வேண்டுமானால், சில பயண விதிகளையும் நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி முதல் சவூதி அரேபியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான புதிய பயண விதிகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக சவூதி ஊடக முகமை (எஸ்பிஏ) வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது உலக சுகாதார அமைப்பு அல்லது செளதி அரேபிய அரசால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்குள்ளாக மேற்கொண்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

மேலும் சவூதிக்கு சென்றவர்கள் கட்டாயமாக ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் எனவும் ஐந்தாவது நாளில் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிஆர் முடிவில் அவர்களுக்கு கொவிட் தொற்று இல்லை என்று வந்தால் மட்டுமே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் அதுவரை அவர்கள் சுய தனிமையிலேயே இருக்க வேண்டியது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில்...

CID யில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு...

2030 இல் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி பணிப்புரை

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை (IRD) பலப்படுத்தல்...