follow the truth

follow the truth

June, 8, 2025
Homeஉள்நாடுதூதரகத்தை மூடினாலும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உதவிகள் தொடரும் – நோர்வே அரசாங்கம்

தூதரகத்தை மூடினாலும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உதவிகள் தொடரும் – நோர்வே அரசாங்கம்

Published on

கொழும்பில் உள்ள தூதரகத்தை அடுத்த ஆண்டு மூடினாலும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உதவிகள் தொடரும் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரைன் ஜோரன்லி எஸ்கெலாட் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே தூதுவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

1960களில் மீன்பிடித் துறையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பின் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட 60 வருடங்களுக்கும் மேலாக இலங்கைக்கு நோர்வே வழங்கிய ஆதரவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

மேலும் தகவல் தொழில்நுட்பம் , கடல் மற்றும் கடல் அறிவியலுக்கு கூடுதலாக மீன்வளம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் விவசாயம் ஆகியவற்றில் முதலீடுகளை செய்யுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி,...