follow the truth

follow the truth

May, 21, 2025
Homeஉள்நாடுடீசல் கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டது!

டீசல் கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டது!

Published on

நாட்டை வந்தடைந்துள்ள  டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

41​,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கே இந்த கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்தது.

இதேவேளை, கொள்வனவு செய்யப்பட்ட பெட்ரோல் அடங்கிய கப்பலிலிருந்து பெட்ரோலை தரையிறக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படுவதாக  இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனை தவிர எதிர்வரும் நவம்பர் மாதம் நாட்டை வந்தடையவுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கான ஆரம்ப கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் பெட்ரோலிய  கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நீண்ட தூர சேவை பஸ்களுக்கு எஞ்சின் தொடர்பிலான அறிக்கை கட்டாயம்

நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு எஞ்சின் சரிபார்த்த அறிக்கையைப் பெறுவதை கட்டாயமாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மருத்துவ தொழில் வல்லுநர்கள் நாளை முன்னெடுக்கவிருந்த போராட்டம் கைவிடப்பட்டது

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் நாளை (22) முன்னெடுக்கவிருந்த நாடளாவிய ரீதியிலான அடையாள வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக...

மலையக ரயில் சேவையில் தாமதம்

நானுஓயா மற்றும் அம்பேவெலவிற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக...