‘லொஹான் ரத்வத்தே பயன்படுத்திய துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி என்று நான் நினைக்கிறேன்’ – சரத் வீரசேகர

1365

அண்மையில் இரண்டு சிறைச்சாலைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டால் சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரதவத்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்

ஞாயிற்றுக்கிழமை (12) வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு வலுக்கட்டாயமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரத்வத்தே நேற்று தனது பதவியில் இருந்து விலகினார்.

அவர் மதுபோதையில் இருந்தபோது நண்பர்கள் குழுவுடன் சிறை வளாகத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது, அதேநேரத்தில் அவர் அனுராதபுரம் சிறையில் இரண்டு கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர, இது தொடர்பாக புகார் அளித்தால், சம்பவங்கள் குறித்து தனது அமைச்சகம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறினார்.

‘அவர் பயன்படுத்திய துப்பாக்கி, உரிமம் பெற்ற துப்பாக்கி. எவ்வாறாயினும், இந்த சம்பவங்கள் தொடர்பாக யாராவது புகார் அளித்தால், சட்டப்படி நாங்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும், ‘என்று அமைச்சர் வீரசேகர மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here