இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் மலேசியா உயர்ஸ்தானிகர் டடோ டான் யாங் தாய்க்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.
இலங்கை மற்றும் மலேசியாவுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற இளைஞர்களை புதிதாக மலேசியா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட quata system மூலம் உள்வாங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.