follow the truth

follow the truth

March, 20, 2025
Homeஉள்நாடுஊரடங்கு தொடர்பில் நாளை இறுதி தீர்மானம்

ஊரடங்கு தொடர்பில் நாளை இறுதி தீர்மானம்

Published on

எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்களை நீடிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை இடம்பெறவுள்ள கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின் போது எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கை விசேட வைத்தியர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை விடுத்து நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என கோரியுள்ளது.

இலங்கை கொவிட் பரவலில் சிவப்பு வலையத்தில் உள்ளதாகவும் இது பச்சை வலையமாக மாறும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை இடம்பெறும் கூட்டத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வயதெல்லை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகனங்களை விடுவிப்பதிலிருந்த தடையை நீக்க அதிவிசேட வர்த்தமானி

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்குவதற்காக நிதியமைச்சு என்ற...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வரை வாய்மூல விடைக்கான...

உணவு உற்பத்தி செய்யும் ஊழியர்களுக்கு விசேட தடுப்பூசி

உணவு உற்பத்தி மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு விசேட தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுகாதார வைத்திய அதிகாரி...