follow the truth

follow the truth

May, 23, 2025
Homeஉலகம்பூமியை நோக்கி வந்த சிறுகோளை தடுத்து அனுப்பிய நாசா விண்கலம்!

பூமியை நோக்கி வந்த சிறுகோளை தடுத்து அனுப்பிய நாசா விண்கலம்!

Published on

விண்வெளியில் சிறுகோளின் சுற்றுப்பாதையை முதன்முறையாக மனிதர்கள் மாற்றியமைத்துள்ளது மிக முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

பூமியை நோக்கி மோதும் வகையில் வரும் விண்கல், சிறுகோள் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே கண்டறிந்து, அவை பூமி மீது மோதுவதைத் தடுத்து திசைதிருப்புவதற்கான சாத்தியக்கூறுகளை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் நாசாவுக்கு சொந்தமான ‘டார்ட்’ விண்கலம், டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வருவதையும், அதனால் பூமிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் கண்டுபிடித்தது. பூமியை சுற்றி வரும் எதிர்கால அச்சுறுத்தல்களை கண்டறிந்து முறியடிப்பதற்காக இந்த ‘டார்ட்’ விண்கலம் ஏவப்பட்டிருந்தது.

இதையடுத்து டிடிமோஸ் பைனரி சிறுகோள் ஆனது பூமி மீது மோதுவதைத் தடுத்து அதை திசைத்திருப்ப நாசா திட்டமிட்டது. அதன்படி அந்த சிறுகோள் மீது ‘டார்ட் ‘விண்கலத்தை கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி நாசா மோத வைத்தது. அதன்படி ‘டார்ட்’ விண்கலம் சரியான பாதையில் பயணம் செய்து பூமிக்கு ஆபத்தாக கணிக்கப்பட்ட சிறுகோளின் மையப்பகுதியை துல்லியமாகத் தாக்கியது. இந்நிலையில், இரு வாரங்களுக்குப் பிறகு விண்கலம் தாக்கிய சிறுகோள் தனது பாதையை மாற்றியுள்ளதால், நாசாவின் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் சிறுகோளின் சுற்றுப்பாதையை முதன்முறையாக மனிதர்கள் மாற்றியமைத்துள்ளது மிக முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த சிறுகோளால் அன்றைய காலத்தில் வாழ்ந்த டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து போனது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...

நீங்கள் தண்ணீரை நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம் – பாகிஸ்தான் ஜெனரல்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி...