follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுசுற்றுலாப் பயணிகளின் வருகை 20 ஆயிரத்தைக் கடந்தது

சுற்றுலாப் பயணிகளின் வருகை 20 ஆயிரத்தைக் கடந்தது

Published on

ஒக்டோபர் மாத முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 20,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது நாட்டிற்கு வருகைதரும் சர்வதேச பார்வையாளர்களின் விகிதத்தில் முன்னேற்றத்தைக் காட்டுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இலங்கைக்கு மொத்தமாக 20 ஆயிரத்து 573 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபர் முதல் வாரத்தில் (1-7) இலங்கைக்கு 8 ஆயிரத்து 614 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாகவும் இரண்டாவது வாரத்தில் (08-14) முதல் வாரத்தைவிட அதிகமாக 9 ஆயிரத்து 125 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூன்றாவது வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் (15-16) சுற்றுலாப் பயணிகளின் வருகை 2 ஆயிரத்து 834ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபர் மாதத்திற்கான இலங்கை சுற்றுலாவுக்கான மிகப்பெரிய மூலச் சந்தையாக இந்தியா உள்ளதாகவும் மொத்த வருகையில் 20 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...