கடந்த நல்லாட்சி அரசாங்கம் நாடளாவிய ரீதியில் 7,500 பேரை பயிலுநர் திட்ட உதவியாளர்களாக நியமிக்கும் திட்டத்தை ஆரம்பித்ததாகவும்,இதற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் மூலம் 6,547 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் எனவும்,அப்போது தேர்தல் அறிவிப்பு வெளியானதால்,தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி நியமனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும்,ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த நிலையில்,மீண்டும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது நிலையில், அதன் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.