follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1பந்துலவிடம் சிஜடி 4 மணிநேர வாக்குமூலம்

பந்துலவிடம் சிஜடி 4 மணிநேர வாக்குமூலம்

Published on

சதோச நிறுவனத்தில், இரண்டு வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 4 மணிநேர வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளரினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பிலும் வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் அமைச்சர் பந்துலகுணவர்தன, காவல்துறைமா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர், ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவல்கள் மற்றும் தரவுகள் உள்ளிட்ட முழுமையான ஆதாரங்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குவதற்கு அமைச்சர் பந்துலகுணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...