வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் பிரதமரின் ஆலோசனை

563

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களை விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கும் தீர்மானத்தை செயற்படுத்த வேண்டாம் என பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (28) கேள்வி எழுப்பப்பட்டது.

ஊடகவியலாளர்கள் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டமை குறித்து, தாம் கவலை அடைவதாக ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here