பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை தொடர்பிலான புதிய உத்தரவு

470

போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் தொடர்பான சரிபார்க்கப்பட்ட தகவல்கள் கிடைத்தால் மட்டுமே சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தகவல்களைப் பெறாமல் பாடசாலைகளில் சோதனைகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

சில பிரதேசங்களில் பாடசாலை மாணவர்களால் போதைப்பொருள்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலையடுத்து, அண்மைய வாரங்களாக பாடசாலைகளை அண்டிய பகுதிகளிலும், சில சந்தர்ப்பங்களில் பாடசாலைகளுக்குள்ளும் சோதனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, சில குழுக்கள் பள்ளி மாணவர்களிடையே ICE போன்ற போதைப்பொருட்களைப் பரப்புவதற்கு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here