follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுUPDATE : இன்று 11 அலுவலக ரயில்கள் இரத்து

UPDATE : இன்று 11 அலுவலக ரயில்கள் இரத்து

Published on

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இன்று (02) காலை இயக்கப்படவிருந்த 11 அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

களனிவெளி பாதை, கடலோர மார்க்கம், புத்தளம் மற்றும் பிரதான பாதைகளில் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் பற்றாக்குறையால் இன்று 60க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படலாம் என ஸ்டேஷன் மாஸ்டர் சங்கம் நேற்று (01) அறிவித்திருந்தது.

புகையிரத திணைக்களத்தில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்பட்ட வெற்றிடங்கள் காரணமாக நேற்று 30 பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...