follow the truth

follow the truth

July, 13, 2025
Homeஉள்நாடுநிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி இயந்திரம் ஞாயிறு முதல் இயங்கும்

நிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின் உற்பத்தி இயந்திரம் ஞாயிறு முதல் இயங்கும்

Published on

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நுரைச்சோலை ‘லக்விஜய’ அனல்மின் நிலையத்தில் செயலிழந்த இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இயங்க முடியும் என மின் உற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

60,000 மெற்றிக் தொன் நிலக்கரி ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று (05) புத்தளத்தை வந்தடைய உள்ளதாகவும், அதனை இறக்கிய பின்னர் ஆலையில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி இருப்பு இருக்கும் என்றும் அதிகாரி தெரிவித்தார்.

பெப்ரவரி மாத இறுதிக்குள் மேலும் 10 நிலக்கரி கப்பல்கள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆகஸ்ட் மாதம் வரை நிலக்கரி இருப்பு போதுமானது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த ஜெனரேட்டரை செயலிழக்கச் செய்ததன் மூலம், தேசிய மின்சார அமைப்பு 270 மெகாவாட் மின்சாரத்தை இழந்தது மற்றும் அந்தத் தொகையை வேறு மூலங்களிலிருந்து பெற வேண்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...