follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉலகம்கொவிட் விதிகளை கடுமையாக்கும் தாய்லாந்து

கொவிட் விதிகளை கடுமையாக்கும் தாய்லாந்து

Published on

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான கொவிட் விதிகளை கடுமையாக்க தாய்லாந்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சீன பிரஜைகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த சீன அதிகாரிகள் முடிவு செய்ததன் காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இன்று (09) முதல் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு கொவிட் தடுப்பூசி பெற்றுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தாய்லாந்து அதிகாரிகள் அந்த விதியை நீக்க கடந்த ஆண்டு அக்டோபரில் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

ஆனால் சீனர்கள் மூலம், கொவிட் தொற்றுநோய் மீண்டும் தங்கள் நாட்டிற்கு வருவதைத் தடுக்க மீண்டும் குறித்த விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

உக்ரைன் போருக்கு அரசியல் தீர்வு தேவை

உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

சும்மா இருக்கும் போட்டி – பரிசு வழங்கும் தென்கொரிய அரசு

தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த போட்டியில் அந்த...

ஜூன் 27 – செப்டம்பர் 10 ஆகிய நாட்கள் தீர்மானமிக்கவை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நவம்பர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இரண்டு...