follow the truth

follow the truth

May, 21, 2025
Homeஉலகம்கொவிட் விதிகளை கடுமையாக்கும் தாய்லாந்து

கொவிட் விதிகளை கடுமையாக்கும் தாய்லாந்து

Published on

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான கொவிட் விதிகளை கடுமையாக்க தாய்லாந்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சீன பிரஜைகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த சீன அதிகாரிகள் முடிவு செய்ததன் காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இன்று (09) முதல் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு கொவிட் தடுப்பூசி பெற்றுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தாய்லாந்து அதிகாரிகள் அந்த விதியை நீக்க கடந்த ஆண்டு அக்டோபரில் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

ஆனால் சீனர்கள் மூலம், கொவிட் தொற்றுநோய் மீண்டும் தங்கள் நாட்டிற்கு வருவதைத் தடுக்க மீண்டும் குறித்த விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவில் நிலவும் மோசமான தண்ணீர் நெருக்கடி – நீர் இன்றி வாடும் 4 இலட்சம் குழந்தைகள்

ஐக்கிய நாடுகள் மற்றும் பிற உதவி அமைப்புகள் காஸாவில் நிலவும் மோசமான தண்ணீர் நெருக்கடி பற்றி எச்சரித்துள்ளன. மார்ச் மாத...

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை பங்களாதேஷில் அறிமுகம்

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை பங்களாதேஷ் நாட்டில் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள்தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் இடைக்கால...

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...