உள்ளூராட்சி தேர்தலில் SLPP – UNP இணைந்து போட்டி

332

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன மீண்டும் பேச்சுவார்த்தைக்காக இன்று(10) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டது என்றார்.

யானைச் சின்னத்தில் போட்டியிடும் உள்ளுராட்சி மன்றங்கள் எவை மலர் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சில உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பொதுவான சின்னத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் உடன்பாடு எட்டப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here