follow the truth

follow the truth

July, 13, 2025
Homeஉள்நாடுரயிலில் பொருட்களை கொண்டு செல்வதற்கான கட்டணம் அறிவிப்பு

ரயிலில் பொருட்களை கொண்டு செல்வதற்கான கட்டணம் அறிவிப்பு

Published on

புகையிரத பெட்டிகளில் பொருட்களை கொண்டு செல்வதற்காக அறவிடப்படும் கட்டணத்தை ரயில்வே திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு தொன் எடையுள்ள சரக்குகளை கொண்டு செல்ல, ஒரு கிலோமீற்றருக்கு 11 ரூபா கட்டணமாக அறவிடப்படுவதுடன், ஒரு ரயில் பெட்டியை வாடகைக்கு பெறுவதற்கு 20,000 ரூபாவினை திரும்பப்பெறக்கூடிய கட்டணமாக வசூலிக்கிறது.

ஒரு ரயில் பெட்டியில் குறைந்தபட்சமாக 35 தொன் எடையையும், அதிகபட்சம் 45 தொன் எடையையும் ஏற்றிச்செல்லமுடியும் எனவும் அத்துடன், சரக்குகளை கொண்டுசெல்லக்கூடிய குறைந்தபட்ச தூரம் 100 கிலோமீற்றரென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...