follow the truth

follow the truth

July, 15, 2025
HomeTOP1பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

Published on

பாராளுமன்றத்தை இன்று முதல் 20 ஆம் திகதி வரை கூடவுள்ளது.

இன்று மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2307/12 மற்றும் 2308/26 ஆம் இலக்க அதிவிசேட
வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழ் 2308/51 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்தார்.

அதனையடுத்து, தனியார் உறுப்பினர் சட்டமூலமாக, பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் முன்வைத்த உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் (இல. 126) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த முன்வைத்த உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் (இல. 160) ஆகியவை இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டு சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு முன்வைக்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘பூர்வீக நிலங்களை விடுவிக்க வேண்டும்’ – ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வலிகாமம் மக்கள் அமைதிப் போராட்டம்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் இலங்கை இராணுவத்தால் fortfarande கைப்பற்றியுள்ள நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி, இன்றைய தினம் (15)...

இஷாரா செவ்வந்தியின் தாயின் இறுதிக் கிரியை இன்று

கணேமுல்ல சஞ்சீவா கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபரான கட்டுவெல்லேகம இஷாரா செவ்வந்தியின் தாயாரின் இறுதிச் சடங்குகள் இன்று...

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே தாக்குதல் – ஐவர் வைத்தியசாலையில்

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில், முதலாமாண்டு மாணவர்கள் மீது மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக,...