follow the truth

follow the truth

July, 16, 2025
Homeஉள்நாடுஇலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

Published on

இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் ​மேற்கொண்டு நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் இன்று(18) மாலைதீவுகளுக்கு பயணம் மேற்கொள்கின்ற நிலையில், அந்த பயணத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி ஆகியோரை சந்திக்கவுள்ளதுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன், இணைச் செயலர் புனித் அகர்வால், இயக்குநர் சந்தீப் குமார் பையப்பு, துணைச் செயலர் (இலங்கை), நிதி சௌத்ரி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலர் ரகூ பூரி ஆகியோரும் வருகைத்தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காட்டு யானைகளை சுடுவதற்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் நோக்கில், வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இன்று (15)...

பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

தமது நிறுவனம் வழங்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித...

1.1 பில்லியன் ரூபா மதிப்புள்ள 35 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 110 கோடி ரூபாய் பெறுமதியான 35 கிலோ கிராம் தங்கத்துடன் விமான நிலைய...