follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதங்காலையின் மொட்டுகள் இரண்டு சஜித்துடன் இணைந்தன

தங்காலையின் மொட்டுகள் இரண்டு சஜித்துடன் இணைந்தன

Published on

தங்காலை மாநகர சபையின் தலைவர் டபிள்யூ.பி. ஆரியதாச மற்றும் மாநகர சபை உறுப்பினர் அரலிய எரந்திம ஆகியோர் நேற்று (21) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்டத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியிடம் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டதுடன், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தங்காலை மாநகர சபைக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும் வழங்கினர்.

இதனைத் தெரிவிக்கும் வகையில் அவரது அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றதுடன் இதில் மாநகர சபையின் தலைவர், மாநகர சபை உறுப்பினர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தங்காலை மாநகர சபையின் தலைவரும், அரலிய எரந்திமவும் இணைந்து மக்கள் இயக்கத்தில் இணைந்தது தனக்கு கிடைத்த வெற்றி என ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி தெரிவித்தார். தங்காலை நகரம் ராஜபக்சவுக்கு சொந்தமானது அல்ல அது எமக்கு சொந்தமானது என திலீப் வேதஆரச்சி தெரிவித்துள்ளார்.

இரண்டு ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களும் பொதுஜன பெரமுன அணியினரும் தங்காலை நகர மக்களுக்கு சேவையாற்ற இடமளிக்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த மாநகர சபை உறுப்பினர் மற்றும் தலைவர் தெரிவித்தார். அதனால்தான், அந்த வேலையைச் செய்யக்கூடிய ஒரு குழுவில் சேர முடிவு செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...