ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்குப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) சபையில் அறிவித்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 மற்றும் இன்றைய தினம் பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக தவிசாளராகச் சபாநாயகரையும், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் உட்பட பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்கமைய, சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, சனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி, கஞ்சன விஜேசேகர, நஸீர் அஹமட், சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பர்னாந்து, காமினி லொக்குகே, வஜிர அபேவர்தன, சீ.பீ. ரத்நாயக்க, ரோஹித அபேகுணவர்தன, சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, சட்டத்தரணி சாகர காரியவசம் ஆகியோர் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்குப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.