follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுபாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் பரிந்துரை

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் பரிந்துரை

Published on

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்குப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) சபையில் அறிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 மற்றும் இன்றைய தினம் பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக தவிசாளராகச் சபாநாயகரையும், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் உட்பட பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்கமைய, சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, சனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி, கஞ்சன விஜேசேகர, நஸீர் அஹமட், சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பர்னாந்து, காமினி லொக்குகே, வஜிர அபேவர்தன, சீ.பீ. ரத்நாயக்க, ரோஹித அபேகுணவர்தன, சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, சட்டத்தரணி சாகர காரியவசம் ஆகியோர் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்குப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...