follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுஒனேஷ் மர்ம மரணம் : விசாரிக்க சிறப்பு CID குழு இந்தோனேசியாவுக்கு

ஒனேஷ் மர்ம மரணம் : விசாரிக்க சிறப்பு CID குழு இந்தோனேசியாவுக்கு

Published on

இலங்கை கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சந்தேக மரணம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட குழுவொன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்குச் செல்லவுள்ளது.

OMEX ஹோல்டிங்கின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஒனேஷ் சுபசிங்க, பெப்ரவரி 5 ஆம் திகதி ஜகார்த்தாவில் வாடகைக்கு எடுக்கப்பட்ட சொகுசு குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார்.

OMEX ஹோல்டிங்ஸ், குடும்பத்திற்குச் சொந்தமான வணிகம் ஒனேஷின் தந்தை ஆல்பிரட் சுபசிங்கவால் நிறுவப்பட்டது.

45 வயதான அவர் தனது பிரேசிலிய மனைவி, மகள்(4) மற்றும் வீட்டு வேலைக்காரியுடன் ஜகார்த்தாவில் விடுமுறையில் இருந்தார்.

தகவல்களின்படி, ஒமேஷின் குடும்பத்திற்கு ஓமேஷின் தொலைபேசிகள் அழைப்புகள் கிடைக்காமையால், குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் அவரது குடியிருப்பு வலுக்கட்டாயமாக உடைக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் பிரேசிலைச் சேர்ந்த மனைவி, மகள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்பதும் அவர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...