புதிய கலால் திருத்தத்தை கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மது மற்றும் புகையிலை பயன்பாடு, தொடர்புடைய வணிகங்களை ஒழுங்குபடுத்துதல், உரிய உரிமங்கள் வழங்குதல் மற்றும் வரி விதிப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக தற்போதைய அரசாணை 1912 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும்.
2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் குறித்த பிரேரணை முன்மொழிவாக முன்வைக்கப்பட்டதுடன், அதற்கமைய சட்ட வரைவை தயாரிப்பதற்கு வரைவு ஆசிரியருக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.