follow the truth

follow the truth

May, 15, 2024
HomeTOP2இந்திய முட்டைகளை 30 ரூபாய்க்கு வழங்க தீர்மானம்

இந்திய முட்டைகளை 30 ரூபாய்க்கு வழங்க தீர்மானம்

Published on

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகள் அடங்கிய கப்பல் இன்று(26) நாட்டை வந்தடையவுள்ளது.

முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி உற்பத்திகளுக்கு மாத்திரம் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா படி உணவகங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பாவனைக்கு உட்படுத்துவதற்கான வழிகாட்டல்களைத் தயாரிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, பேக்கரி உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் முட்டையை பாவனைக்கு உட்படுத்தும் போது கையுறை பாவிக்க வேண்டும் எனவும் முட்டை ஓடுகளை பாதுகாப்பாக அகற்ற அல்லது அழிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வௌிநாடுகள் சிலவற்றில் பரவியுள்ள பறவைக் காய்ச்சல் நாட்டிற்குள் வருவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

கோட்டா களமிறக்கப்பட்ட அதே அநுராதபுர புனித பூமியில் மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் தொகுதிகள் மட்டத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள...

விஜயதாசவுக்கான தடையுத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராகவும் பதில் பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்ட நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும்...

76வது நக்பா தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பில் பலஸ்தீன திரைப்பட விழா

76வது நக்பா தினத்தை முன்னிட்டு 'கொழும்பு பலஸ்தீன திரைப்பட விழா' இன்று (15) மாலை 5.30 மணிக்கு விளையாட்டுத்துறை...