வியாழக்கிழமை விசேட அரசியலமைப்பு பேரவைக் கூட்டம்

243

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் எதிர்வ ரும் 09 திகதி வியாழக்கிழமை அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு அமைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியலமைப்பு பேரவை முன்னெடுத்துள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர் நியமனத்துக்கான விண்ணப்பம் கடந்த பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை கோரப்பட்டது. சிவில் பிரஜைகளிடமிருந்து 100 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here