பல ரயில் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்காது

245

நாளை (15) முன்னெடுக்கவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் பல புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளாது என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், நிலைய அதிபர்கள் சங்கம், புகையிரத கடவை காவலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் நாளை (15) நடைபெறவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளன.

பல புகையிரத தொழிற்சங்கங்களுடன் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், புகையிரத பொது முகாமையாளர் இதனை தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட, புகையிரத லொகோமோடிவ் பொறியியலாளர் சங்கம் தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here