follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1'பப்புவா நியூ கினியா' வை முன்னுதாரணமாக பாருங்கள்

‘பப்புவா நியூ கினியா’ வை முன்னுதாரணமாக பாருங்கள்

Published on

‘பப்புவா நியூ கினியா’ எனும் நாட்டை சிலர் மட்டமாக கருதுவதாகவும் அதிலிருந்து நாம் கற்க வேண்டியவை ஏராளம் என்றும் சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

“.. இது பதவிகளைப் பற்றிய ஒரு பக்கக் கதை. பப்புவா நியூ கினியா ஒரு ‘சார்ட்டர் நாடு’ என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. பப்புவா நியூ கினியாவில் ‘பொறுப்புச் சட்டம்’ என்ற சட்டம் உள்ளது.

இதன் மூலம் என்ன செய்வது என்றால், ஒரு அமைச்சரோ, ஒரு இராஜாங்க அமைச்சரோ, ஒரு அரச நிறுவனத் தலைவரோ தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை புறக்கணித்தால், நீதிமன்ற நடவடிக்கை வரை எடுத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

எனவே, வேடிக்கை பார்க்க வருபவனும் திருட வருபவனும் அந்நாட்டில் பதவிகளை எடுக்க வரமாட்டார்கள். நாட்டிற்கான அந்தப் பொறுப்பை பயமின்றி நிறைவேற்றுவேன் என்று நினைக்கும் ஒரு மனிதன் மட்டுமே அந்த நாட்டில் பதவிகளை எடுக்க வருவான்.

உலகெங்கிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் நஷ்டமடைந்து வருவதால், பப்புவா நியூ கினியாவில் விமான நிறுவனத்தின் தலைவர் பதவியை ஏற்க யாரும் இல்லை.

இலங்கையில் ஒரு இளைஞன் அந்தப் பொறுப்பை ஏற்று அதனைச் சரியாக நிறைவேற்றியுள்ளார். இது ஒரு பக்கக் கதையாக இருந்தாலும், ‘சிஸ்டம் சேஞ்ச்’ என்றால் அது போன்ற விஷயங்களை நமக்கு தெளிவாக விளக்குகிறது.

இந்த நாட்டில் நிலைமையை மேம்படுத்த முடியும். இது கடினமான பணி அல்ல..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...