‘பப்புவா நியூ கினியா’ வை முன்னுதாரணமாக பாருங்கள்

1004

‘பப்புவா நியூ கினியா’ எனும் நாட்டை சிலர் மட்டமாக கருதுவதாகவும் அதிலிருந்து நாம் கற்க வேண்டியவை ஏராளம் என்றும் சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

“.. இது பதவிகளைப் பற்றிய ஒரு பக்கக் கதை. பப்புவா நியூ கினியா ஒரு ‘சார்ட்டர் நாடு’ என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. பப்புவா நியூ கினியாவில் ‘பொறுப்புச் சட்டம்’ என்ற சட்டம் உள்ளது.

இதன் மூலம் என்ன செய்வது என்றால், ஒரு அமைச்சரோ, ஒரு இராஜாங்க அமைச்சரோ, ஒரு அரச நிறுவனத் தலைவரோ தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை புறக்கணித்தால், நீதிமன்ற நடவடிக்கை வரை எடுத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

எனவே, வேடிக்கை பார்க்க வருபவனும் திருட வருபவனும் அந்நாட்டில் பதவிகளை எடுக்க வரமாட்டார்கள். நாட்டிற்கான அந்தப் பொறுப்பை பயமின்றி நிறைவேற்றுவேன் என்று நினைக்கும் ஒரு மனிதன் மட்டுமே அந்த நாட்டில் பதவிகளை எடுக்க வருவான்.

உலகெங்கிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் நஷ்டமடைந்து வருவதால், பப்புவா நியூ கினியாவில் விமான நிறுவனத்தின் தலைவர் பதவியை ஏற்க யாரும் இல்லை.

இலங்கையில் ஒரு இளைஞன் அந்தப் பொறுப்பை ஏற்று அதனைச் சரியாக நிறைவேற்றியுள்ளார். இது ஒரு பக்கக் கதையாக இருந்தாலும், ‘சிஸ்டம் சேஞ்ச்’ என்றால் அது போன்ற விஷயங்களை நமக்கு தெளிவாக விளக்குகிறது.

இந்த நாட்டில் நிலைமையை மேம்படுத்த முடியும். இது கடினமான பணி அல்ல..”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here