follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுபாடசாலை மாணவியை போதைக்குட்படுத்தி பாலியல் பலாத்காரம்

பாடசாலை மாணவியை போதைக்குட்படுத்தி பாலியல் பலாத்காரம்

Published on

கொழும்பு பிரதேசத்தில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியுடன் காதல் உறவைப் பேணி, ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாக்கி அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 23 வயது இளைஞன், கொழும்பு மத்தியப் பிரிவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவின் பொலிஸ் குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பதினேழு வயதுடைய மாணவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொழும்பு பிரதேசத்தில் உள்ள செல்வந்த வர்த்தகரின் மகள். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேலையில்லாதவர் என தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என சிறுமியின் தாய் பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளார்.

மகள் சுமார் 6 வருடங்களாக இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் தனது முறைப்பாட்டில் தாயார் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலமுறை எச்சரித்தும் மகள் உறவை நிறுத்தவில்லை என அவர் பொலிசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...