திருட்டு அரசுகளுக்கு பணம் கொடுக்கத்தான் IMF இருக்கிறது

356

சர்வதேச நாணய நிதியம் மக்களுக்காக ஸ்தாபிக்கப்படவில்லை திருட்டு அரசாங்கங்களுக்காக உருவாக்கப்பட்டது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இம்முறையும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிப் பணம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டவுடன், சோமாலியாவில் செய்தது போன்று திருடர்கள் சுற்றிவளைத்து திருடப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் இலங்கை நாற்பது ஐம்பது வருடங்களாக கடன்களை பெற்று அதனை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here