follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுஉங்கள் முடிவில் எங்களுக்கு தீர்வு இல்லை - ஸ்டாலின்

உங்கள் முடிவில் எங்களுக்கு தீர்வு இல்லை – ஸ்டாலின்

Published on

ஆசிரியர் சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (12) நடைபெற்ற சந்திப்பில் ஆசிரியர் சம்பள முரண்பாடுகள்
குறித்து அரசாங்கத்தால் தீர்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்தின்
தீர்வுக்கு விருப்பம் இல்லை என்று கூறினார்.

சந்திப்பிற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘அரசாங்கம் அளித்த தீர்வுக்கு நாங்கள் எங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை. நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. நாங்கள்
நாளை கூடி அது தொடர்பான இறுதி முடிவை எட்டும் வரை எங்கள் போராட்டத்தை தொடருவோம் ‘என்று ஸ்டாலின் கூறினார்.

கூட்டத்தின் போது சபைத் தலைவரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன, நிதி ஒதுக்கீடு சட்டம் பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்டதால் உடனடியாக ஒரு தீர்வை வழங்க முடியாது என்றும் ஜனவரி 2022 வரை பணம் செலுத்த முடியாது என்றும் கூறினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி...

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்...