இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 10 இலட்சம் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதலுடன் முட்டைகள் இருப்பு வைக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அதற்கான மாதிரிகளை எடுக்க இருப்பதாகவும் குறித்த அதிகாரி கூறினார்.